என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தந்தை மகள் மீது வழக்கு
நீங்கள் தேடியது "தந்தை மகள் மீது வழக்கு"
அருமனை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக அமைச்சரின் உறவினர் என கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்த தந்தை-மகள் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
நாகர்கோவில்:
அருமனை அருகே சென்னித்தோட்டம் மடத்து விளாகத்து பகுதியைச் சேர்ந்தவர் சிவனந்தன் (வயது 63). இவர் நாகர்கோவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
எனது உறவினர்கள் ஜெரால்டு மற்றும் ஷோபா ஆகியோரிடம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கீழநத்தம் தெற்கு ஊரைச் சேர்ந்தவர் ஆறுமுக பாண்டியன் மற்றும் அவரது மகள் துர்கா ஆகியோர் அமைச்சரின் உறவினர் என்று கூறி அறிமுகம் ஆனார்கள். பின்னர் தந்தை, மகள் இருவரும் அரசு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி எனது உறவினர்களிடம் கூறினார்கள். அவர்களை நம்பி வங்கி மூலமாகவும், நேரிடையாகவும் ரூ.7 லட்சம் பணம் கொடுத்தனர். பணம் கொடுத்த பிறகு வேலை வாங்கி கொடுக்கவில்லை.
இதனால் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டனர். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.
இன்ஸ்பெக்டர் ஜானகி இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஆறுமுக பாண்டியன், துர்கா ஆகியோர் இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 420 ஐ.பி.சி. பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X